| 13. மீனவன் வரலாறுணர்ந்த காதை | 
                  | அடிகளார் கூறத்தொடங்குதல் | 
                  |  | 
                  |   | இசையியல் இயம்பும் ஏட்டுச் சுவடி வசையிலா நினக்கு வழங்கிய மீனவன்
 தன்றிறம் கூறுவென் தயங்கிழை! கேளாய்,
 நின்பெரும் பணிக்கும் நீள்பயன் விளைக்கும்;
 |  | 
                  |  |  |  | 
                  |  | குறியிடத்திற் காதலர் |  | 
                  |  |  |  | 
                  |  | நெல்லூர் என்னும் நல்லூர் ஆங்கண் | 5 | 
                  |  | கழனி வினைபுரி களமர் குடிதனில் எழில்நிறை செல்வி இடுபெயர்ப் பொன்னி
 நல்லவள் ஒருத்தி, கொல்லுலைத் தொழில்புரி
 வில்லவன் என்னும் விடலை தன்னொடு
 |  | 
                  |  | அறியாக் காதல் வாழ்வின ளாகிக் | 10 | 
                  |  | குறியிடம் ஒருநாள் கூடினள் நிற்க; |  | 
                  |  |  |  | 
                  |  | அலர் பரவியது |  | 
                  |  |  |  | 
                  |  | நெறியிடை ஏகும் நெடுமகன் ஒருவன் கண்டனன் அவர்நிலை காதல் அறியான்,
 அண்டையர் மறைசெயல் அறிவதும் தீமை
 |  | 
                  |  | அதனைப் பலர்க்கும் அறைவதும் தீமை; | 15 | 
                  |  | இதனை உணரான் எதிர்ப்படுவோர்க்கெலாம் புதுமை கண்டவன் போலதை விளம்ப
 மனைதொறும் அம்மறை வாயிடம் பெற்றது
 நினையா வகையிற் பனையாய் வளர்ந்தது;
 |  | 
                  |  |  |  | 
                  |  | ஊரார் வாய் |  | 
                  |  |  |  | 
                  |  | பாரோர் அறிய ஒருபொருள் பரப்ப | 20 | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | தயங்கிழை - பூங்கொடி, கழனி - வயல், களமர் - உழவர், விடலை -           சிறந்த ஆடவன், நெறியிடை - வழியில், நெடுமகன் - மூடன், மறை - இரகசியம். |  | 
                  |  |  |  |