பக்கம் எண் :

72.மீரா கவிதைகள்

என்னை நெருங்கிட வேண்டாம் போங்கள்
என்றே முறைக்கும் பெண்ணே!
இருள்வண்டாய் உன் கூந்தல் நுழைந்தால்
என்னடி செய்வாய் கண்ணே!

என்னைத் தழுவிட வேண்டாம் போங்கள்
என்றே திமிரும் பெண்ணே!
இளமென் காற்றாய் மேனியைத் தொட்டால்
என்னடி செய்வாய் கண்ணே!