குணம்படைத்துக் கருணைமிகும் கொள்கைக் காகக் கோடானு கோடிமக்கள் எங்கும் கூடிக் ‘கணம்பொறுங்கள்! கண்டாலும் போதும்‘ என்று களிசிறக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே. 2 எச்சிலுண்ணும் சிறுமனத்தார் பலபேர் கூடி இல்லாத பெருமைகளை இசைத்துக் கூறும் இச்சகத்தால் மதிமயங்கி இருமாப் புற்ற இருள்மனத்தார் எத்தனையோ அரசர்கண்டோம்; மெச்சுகின்ற பிறர்மொழியை மிகைசெய் யாமல் மெய்யறிவும் பொய்வெறுப்பும் துணையாய் மேவ அச்சமற்ற நல்லொழுக்கம் அதற்கே மக்கள் ஆசைசெய்யும் அரசனெங்கள் ஜவஹர் லாலே. 3 சேனைகளை முன்செலுத்திப் பின்னால் நின்று ‘ஜெயித்துவிட்டேன்!‘ என்றுசொல்லிச் செருக்கி வாழும் ஊனமுள்ள பெருமையினால் அரச ரென்போர் உலகத்தில் எத்தனையோ பேரைக் கண்டோம்; தீனர்களின் துயர்துடைக்க முன்னால் நின்று தீரமுடன் பிறர்க்குழைக்கும் சிறப்புக் காக மானமிகும் வீரரென எங்கும் வாழ்த்த மன்னனென விளங்கிடுவான் ஜவஹர் லாலே 4 கஞ்சியின்றி உயிர்தளர்ந்த ஏழை மக்கள் காலில்வந்து விழுவதையே களிப்பாய் எண்ணிப் பஞ்சணையில் படுத்திருந்த படியே இந்தப் பாரளிக்கும் மன்னவர்கள் பலரைப் பார்த்தோம்; தஞ்சமின்றித் தரித்திரத்தின் கொடுமை வாட்டத் தவித்துழலும் பலகோடி மக்கட் கெல்லாம் அஞ்சலென்ற மொழிகூறி ஆண்மை யூட்டும் அன்புருவாம் மன்னனெங்கள் ஜவஹர் லாலே. 5 ஆயுதத்தின் அதிகாரம் அதற்கே அஞ்சி அடிபரவும் பலபேர்கள் அருகே சூழப் |