புலவர் சிவ. கன்னியப்பன் 135

மோச மிகுந்த பகட்டுடை வாழ்க்கையில்
       மோகம் வைத் தேஇந்த மோசமுற்றோம்!       3

சுத்த உணவிலும் சுத்த உடையிலும்
       சொன்ன விதிகளை விட்டு விட்டோம்;
நித்தங் குளிப்பதும் பத்தியங் காப்பதும்
       மெத்தக் குறைந்தது தேசத்திலே,       4

காலையி லெழுந்து நீராடல் கொஞ்சம்
       கர்த்தனை யெண்ணித் துதிபாடல்
மாலையி லோடி விளையாடல் இந்த
       மார்க்கத்தை விட்டனர் மக்களெல்லாம்.       5

அளவை யறிந்து புசிப்பதில்லை தங்கள்
       அளவை யளந்து வசிப்பதில்லை
களவுக்குப் பின்னால் கதவை அடைப்பவர்
       காரியம் போலடி கண்மணியே!       6

நல்ல வழக்கங்கள் உள்ளவர் தங்களை
       நாடுமோ நோய்களும் எந்நாளும்?
நல்ல வழக்கங்கள் நாளும் வளர்ந்திட
       நாடு செழித்திட வேணுமடி.       7

77. தீர்க்கதரிசி

பல்லவி

தீர்க்க தரிசிசொன்ன மார்க்க மதனைவிட்டுத்
திரும்புவ தென்ன மனமே!       (தீர்க்க)

அநுபல்லவி

பார்க்குள் பெரியவர்கள் பார்த்த அனுபவத்தைக்
காக்கும் படியுதித்த காந்தி யெனும்பெரிய.       (தீர்க்க)