கம்பனை மறந்தால் தமிழ்ஏது? கவிதை என்பதும் கமழாது! அம்புவிக் கவிஞருள் அரசாகும் அவனே தமிழ்மொழிப் பரிசாகும். 4 கற்பனை சிறந்தது கம்பன்சொல் கலைத்திறம் நிறைந்தது கம்பன்சொல் அற்புதச் சித்திரம் அவன்பாட்டு அறிவுக் கினிப்பதிங் கவன்பாட்டு 5 சத்தியம் மிளிர்வது கம்பன்சொல் சாந்தியைத் தருவது கம்பன்சொல் நித்தியம் பெற்றதும் அவன்வாக்கு நிந்தனை அற்றதும் அவன்வாக்கு. 6 இயல்பாம் வழிகளில் கதைபேசி இசைமிகும் மொழிகளில் கவிவீசி நயமிகும் நாடகம் நடப்பதுபோல் நாவலர் வியந்திடத் தொடுப்பவனாம். 7
கலைமொழி நயங்களைக் காட்டிடவும் கல்வியில் தெளிவினை ஊட்டிடவும் நிலைதரும் ஊற்றெனத் தமிழ்நாட்டில் நின்றிடும் கம்பன் அரும்பாட்டு. 8 கன்னித் தமிழெனும் பெருமையெலாம் கம்பன் கவிதையின் அருமையினால் இன்னொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ! 9 துயரம் நேர்ந்திடில் துணையாகும் துன்பம் நீந்திடப் புணையாகும் அயர்வுறும் வேளையில் அலுப்பகற்றும் அச்சம் நீங்கிட வலுப்படுத்தும் 10 |