புலவர் சிவ. கன்னியப்பன் 243

மாதர்தம்உடலைக் கண்டு
       மதிமோசம் போக வேண்டாம்
ஓதிடும் அழகும் மார்பும்
       ஒய்யார இடையும் எல்லாம்
பேதுறும் தசையே யன்றிப்
       பிறிதொன்றும் இல்லை; இந்தத்
தீதறும் உண்மை ஓர்ந்து
       தீர்மானத் தெளிவு கொள்வாய்.       3

பிறந்தனஉயிர்களெல்லாம்
       நிச்சயம் பிணமாய்ப் போகும்
உறைந்துதா மரைஇ லைமேல்
       உருளு நீர்த் துளியே போல
நிறைந்துள உலக ஜாலம்
       நிலையற்ற நீர்மைத் தாகும்;
வெறுந்துயர், பற்றும் நோயும்
       விளைவன்றி வேறொன் றில்லை.       4

வருமானம் உள்ள மட்டே
       பரிவாரம் வந்து சேரும்
விரிவாகும் க்ஷேம லாப
       விசாரணை வெளிவே ஷம்தான்;
பருமானப் பலமுண் டாகில்
       பந்துபாத் தியமும் உண்டாம்
உருமாறிக் கிழமாய் விட்டால்
       உன்னையார் கேட்பார் பிள்ளை?       5

பேச்செல்லாம் பேசி மிக்க
       பெருமிதம் அடைவ தெல்லாம்
மூச்சுள்ள வரையே; தேகம்
       முடங்கிய பிணமாய் விட்டால்
கூச்சின்றி உன்னை முன்னே
       சுயம்வரம் கொண்ட காதல்
நாச்சியும் அச்சம் கொள்ளாள்
       நாறுடல் அதனைக் கண்டே.       6