தேம்பிடும் கைத்தறி நெசவாளர் திடமுறச் செய்திடும் கூட்டுறவு. 3 வாணிபம் பெருகிடும் கூட்டுறவால் வளப்பம் மிகுந்திடும் விவசாயம் நாணய நடத்தைகள் அதிகரிக்கும் நம்பிக்கை வளர்ந்திடும் கூட்டுறவால். 4 பண்டக சாலைகள் நிறைவாகும்; பணமுடை என்பது குறைவாகும்; கொண்டுள, காரியம் எதுவெனினும் கூட்டுற விருந்தால் அதுமுடியும். 5 அன்பு புலப்படும் கூட்டுறவால் ஆட்சி பலப்படும் கூட்டுறவால் தென்பு மிகுந்திடும் யாருக்கும் தேசம் உயர்த்திடும் பாருக்குள். 6 கூட்டுற வென்னும் கொள்கையினைக் குற்றமில் லாமல் மேற்கொண்டால் நாட்டில் தரித்திரம் நீங்கிவிடும் நம்முடை சுதந்தரம் ஓங்கிவிடும். 7 192. யார் தொண்டன்? தொண்டு செய்யக் கற்றவன் துயரம் போக்கும் உற்றவன் சண்டைப் போடும் மக்களைச் சரச மாக்கி வைக்கவே. (தொண்)1
தீர வாழ்வு சொல்லுவான் தீமை யாவும் வெல்லுவான் ஈர மற்ற செய்கைகள் வீர மென்றல் பொய்யென. (தொண்)2 |