புலவர் சிவ. கன்னியப்பன் 369

‘இன்றுனக்கு உற்ற துன்பம்
       எனக்குறச் செய்வேன்‘ என்று
தன்மகன் உயிரைக் கன்றின்
       உயிருக்கே ஈடாய்த் தந்து
வென்றிகொள் நீதி மன்னன்
       வேறுஎந்த மொழியில் உண்டு?       3

கொண்டவன் அயலூர் போகக்
       குலமகள் தனித்த வீட்டை
அண்டினர் கதவைத் தட்டில்
       கரத்தினை அறுப்போம் என்று
விண்டதை மறந்து செய்த
       குற்றத்தால் விதித்த வாறே
தண்டனை தனக்கே தந்த
       மன்னனும் தமிழ னாகும்.       4

திடமிகும் தெய்வ பக்தன்
       தீவிர தேச பக்தன்
கடமையும் தீர வீரக்
       கருணைசேர் கட்ட பொம்மன்
‘அடிமையாய் வாழ மாட்டேன்
       அன்னியர்க்கு அஞ்சேன்‘ என்று
கொடுமையை எதிர்த்து நின்ற
       கொள்கையும் தமிழன் கூற்றாம்.       5

உள்ளமும் உடலும் கூம்ப
       உலகெலாம் வணங்கும்சோதி
வள்ளல்அக் காந்தி செய்த
       அறந்தரு வாழ்க்கை முற்ற
தளளரும் அறங்க ளாகத்
       தமிழ்த்திருக் குறளில் முன்பே
வள்ளுவன் வாழ்ந்து சொன்ன
       கொலைதவிர் வாய்மை ஆகும்.       6