பொன்னியல் போக வாழ்வின் பொதுநலம் தனையே கோரும்; என்னுடைப் பரத நாட்டின் இக்கொடி இந்த வாழ்வின் பின்னையும் அறிவு தேடும் பேரின்பம் தனையும் பேசும். 2 பிறநாட்டுக் கொடிகள் எல்லாம் பிறநாட்டைப் பிடிக்க எண்ணி மறம்நாட்டி மக்கள் தம்மைச் சண்டையில் மடியச் செய்யும்; அறம்நாட்டி உலகை ஆண்ட அரியநம் கொடியோ, மூன்று நிறம்காட்டி நிலையாய் உள்ள நீதியே ஓத நிற்கும். 3 பச்சையாம் நிறத்தி னாலே பசுமையாம் அன்பை யூட்டும் நிச்சயம் வெள்ளை அந்த நிமலமாம் உண்மை நீட்டும்; துச்சம்இவ் வுலகம் என்னும் துறவினைக் காவி சொல்லும்; அச்சம்இல் குடிசைக் கூலி அதில்ஒரு ராட்டை காட்டும். 4 தருமமே குறியாக் கொண்டு தனக்கென்று எதையும் வேண்டாக் கருமமே கடன்என்று ஓதிக் கருணையின் வழியே காட்டி வருமமும் வஞ்சம் நீக்கும் வாழ்க்கையை வகுத்துப் பேசும் பெருமைநம் கொடியைப் போலப் பிறிதொரு கொடியும் உண்டோ! 5 இந்திய மகனே! இந்த இணையிலாக் கொடியைக் காத்தல்
|