புலவர் சிவ. கன்னியப்பன் 371

பொன்னியல் போக வாழ்வின்
       பொதுநலம் தனையே கோரும்;
என்னுடைப் பரத நாட்டின்
       இக்கொடி இந்த வாழ்வின்
பின்னையும் அறிவு தேடும்
       பேரின்பம் தனையும் பேசும்.       2

பிறநாட்டுக் கொடிகள் எல்லாம்
       பிறநாட்டைப் பிடிக்க எண்ணி
மறம்நாட்டி மக்கள் தம்மைச்
       சண்டையில் மடியச் செய்யும்;
அறம்நாட்டி உலகை ஆண்ட
       அரியநம் கொடியோ, மூன்று
நிறம்காட்டி நிலையாய் உள்ள
       நீதியே ஓத நிற்கும்.       3

பச்சையாம் நிறத்தி னாலே
       பசுமையாம் அன்பை யூட்டும்
நிச்சயம் வெள்ளை அந்த
       நிமலமாம் உண்மை நீட்டும்;
துச்சம்இவ் வுலகம் என்னும்
       துறவினைக் காவி சொல்லும்;
அச்சம்இல் குடிசைக் கூலி
       அதில்ஒரு ராட்டை காட்டும்.       4

தருமமே குறியாக் கொண்டு
       தனக்கென்று எதையும் வேண்டாக்
கருமமே கடன்என்று ஓதிக்
       கருணையின் வழியே காட்டி
வருமமும் வஞ்சம் நீக்கும்
       வாழ்க்கையை வகுத்துப் பேசும்
பெருமைநம் கொடியைப் போலப்
       பிறிதொரு கொடியும் உண்டோ!       5

இந்திய மகனே! இந்த
       இணையிலாக் கொடியைக் காத்தல்