சமயம் என்றும் சாதி என்றும் சண்டை யற்று வாழவும் சமதை யாக மொழிகள் யாவும் சலுகை பெற்று வளரவும் அமைதி யாக தேச சேவை அச்சம் இன்றி ஆற்றுவோம்; அவதி மிக்க ஏழை மக்கள் வறுமை போக மாற்றுவோம்; நமது நாடு உலகி னுக்கு நல்ல மார்க்கம் காட்டவே நாங்கள் என்றும் பணிபு ரிந்து வெற்றி மாலை சூட்டுவோம். 2 முன்னி ருந்த நமது நாட்டின் முனிவர் கண்ட ஞானமே முற்றும் இந்த உலகி னுக்கும் உற்ற நன்மை யானது. என்ன துன்பம் எந்த வேளை எங்கு அடுத்த போதிலும் எந்தை காந்தி தந்த சாந்த மந்தி ரத்தை ஓதுவோம்; தன்ன லம்மற றந்து நாட்டின் தன்ன லத்தைத் தாங்கவும் தரணி தன்னில் யுத்தம் என்ற இரணப் பேச்சு நீங்கவும் மன்னன் இந்த பரத நாட்டின் மகிமை காக்கும் ஜவகர்லால் மாசி லாத சேவை செய்து பேசும் நீதி தவறிடோம். 3 குறிப்புரை:- அவதி - துன்பம்; தரணி - உலகம்; மாசு - குற்றம். |