புதுமை யானகொடி பாரீர் - வேறு பூத லத்திலிலை தேரீர் முதுமை யாய்எவர்க்கும் பொதுவாம் - வாழ்வின் முறையைக் காட்டுவதும் இதுவாம். (கொடி)2 பச்சை யானஒரு தோற்றம் - நமக்குப் பக்தி வேண்டுமெனச் சாற்றும்; இச்சை யானபொருள் கூடப் - பக்தி இருக்க வேணும்அதை நாட. (கொடி)3 துய்ய வெள்ளைநிறக் காட்சி - உண்மை துலங்கும் என்பதற்குச் சாட்சி மைய மாகநிற்கும் மர்மம் - சத்தியம் மதங்கள் யாவினுக்கும் தர்மம். (கொடி)4 துறவின் வர்ணம்அந்தக் காவி - உலகின் துக்கப் பூட்டினுக்குச் சாவி; சிறையும் வீடும்அதற்கு ஒன்றே - என்னும் சேதி ஓதுவதற்கு என்றே. (கொடி)5 நடுவில் சாட்டையொன்று பார்ப்போம் - அதில் நலிந்த போர்க்குக்கஞ்சி வார்ப்போம் வடுவி லாததொழில் நூற்றல் - குடிசை வாழும் ஏழைக்குஎன்று சாற்றல். (கொடி)6 பக்தி, சத்தியம், தியாகம் - இவற்றின் பண்பே வாழ்க்கையின் யூகம் நித்தம் நித்தமிந்த நீதி - தம்மை நீட்டும் இக்கொடியின் சோதி. (கொடி)7 ஜாதி பேதம்அதில் இல்லை - மற்றும் சமய பேதம்அதில் இல்லை நீதி யானபல முறைகள் - நமக்கு நிலைய மாகும் அதன் குறிகள். (கொடி)8 |