புலவர் சிவ. கன்னியப்பன் 413

தந்திரங்கள் மிகப்பயின்றும்தருவது என்ன?
தரணியெங்கும் பல்கலைகள்தழைத்தும் என்ன?
சிந்தனையில் கருணைமட்டும் இல்லை யானால்
சீரழியும் உலகம்என்றசேதிக்கு என்றே
வந்துதித்துத் திருவருளை வாழ்ந்து காட்டும்
வள்ளல் எங்கள் காந்திவழிவாழ வேண்டும். 2

மந்திரிகள்தந்திரிகள் மலிந்தால் என்ன?
மண்டலத்தைஒருகொடிக்கீழ் ஆண்டால் என்ன?
அந்தரத்தில் தோன்றுகின்ற அனைத்தும் வென்ற
அண்டம்எலாம் நமதுஆட்சிஆனால் என்ன?
எந்தஒரு உயிரிடத்தும் கருணை காட்டும்
இரக்கம்ஒன்றே இவ்வுலகைவாழ வைக்கும்
அந்தஒரு அறிவினுக்கே உடலம் கொண்டோன்
ஐயன்எங்கள் காந்திநாமம்வாழ்க! வாழ்க! 3

விஞ்ஞானச்சக்திகளால் வென்றால் என்ன?
விதம்விதமாய்ச்சுகப்பொருள்கள் விரிந்தால் என்ன?
இஞ்ஞாலத்(து) உயிர்கள் எல்லாம் மகிழ்ந்துவாழ
இம்சையற்ற சமுதாயம்வேண்டு மானால்
பொய்ஞ்ஞான மதவெறிகள் போக வேண்டும்
பொறுமைதரும்கருணைஒன்றே பொருளாம் என்ற
மெய்ஞ்ஞானம் நமக்குவர வாழ்ந்து சென்ற
மேதையெங்கள் காந்திமகான்நாமம் வாழ்க! 4

எண்ணரியதேசபக்தர் உயிரை ஈந்தே
எத்தனையோ துன்பம்எல்லாம் சகித்த தாலே
மண்ணுலகில் வேறுஎவரும் அறியா நல்ல
மார்க்கத்தால்விடுதலையை மலரச் செய்தோம்;
புண்ணியநல் அறநெறிசேர் அரசு நாட்டிப்
புவியெங்கும் சாந்தவழிபோதம் காட்ட
அண்ணல் எங்கள் காந்திமகான் திருநா மத்தை
அனுதினமும்போற்றிசெய்ய அருள்வாய் தேவா!5

குறிப்புரை:-இஞ்ஞாலம் - இவ்வுலகம்; அறநெறி - தர்மவழி;
சீரழியும் - கெடும்; மார்க்கம்- வழி; அனுதினமும்- நாள்தோறும்.