புலவர் சிவ. கன்னியப்பன் 43

ஏசு தமிழரலர் என்றகா ரணத்தால்
       இகழ்ந்து விடுவதில்லை தமிழ்நாட்டார்;
பேசும் தமிழருள் கிறித்துவைப் போற்றும்
       பெருமை யுடையவர்கள் பலபேர்கள்.       (தமிழா)4

மகமது பிறந்தது மற்றொரு தேசம்அவர்
       மகிமை விளங்குமிந்தத் தமிழ்நாட்டில்;
அகமகிழ்ந் தனுதினம் நாகூர் ஆண்டவனை
       ஆரார் தொழுகிறார் அறியாயோ?       (தமிழா)5

உலகின் மதமெலாம் ஒவ்வொரு காலத்தில்
       ஓடிப் புகுந்ததிந்தத் தமிழ்நாட்டில்;
கலகம் சிறிதுமின்றிக் கட்டியணைத் தவற்றைக்
       காத்து வளர்த்தவர்கள் தமிழ்நாட்டார்.       (தமிழா)6

தன்னுயிர் நீப்பினும் பிறர்கொலை அஞ்சிடும்
       தருமம் வளர்த்தவர்கள் தமிழ்நாட்டார்;
மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடல்
       மண்டிக் கிடப்பதுன்றன் தமிழ்மொழியே.       (தமிழா)7

கொல்லா விரதமே நல்லார் வழியென்று
       கூறி நடந்தவுன்றன் குலமுன்னோர்
எல்லா விதத்திலும் எவரும் மதித்திடும்
       ஏற்ற முடையதுன் இல்லறமாம்.       (தமிழா)8

உலகம் முழுவதும் கலகம் உறுதுபார்!
       உன்பெருங் கடமைகள் பலவுண்டு;
விலகும் படிசெய்யும் வெறிகொண்ட பேச்செல்லாம்
       விலக்க விழித்தெழு வாய்தமிழா!       (தமிழா)9

இந்திய தாய்மனம் நொந்து கிடக்கையில்
       இனமுறை பேசுகின்றார்! இழிவாகும்;
அந்தப் பெரியவளின் அடிமை விலங்கறுத்துன்
       அன்பை நிலைநிறுத்(து) அகிலமெல்லாம்.       (தமிழா)10