430நாமக்கல் கவிஞர் பாடல்கள்

எண்ணில்அகிம்சை அறநெறியை
       இவன்போல் நடத்திய பிறர் அறியோம்.       2

கோபம்எதிலும் கொள்ளாது
       கொண்டவர் தமையும் எள்ளாது
பாபம் என்றதைப் புரியாது
       பகவான் சிந்தனை புரியாமல்
தீபம் போல்அருள் ஒளிவீசும்
       திருந்திட வேநன் மொழிபேசும்
சாபம் நீக்கிய காந்திமகான்
       சத்தியச் சுதந்தரச் சாந்தநெறி.       3

அச்சம்என்பதை அறியாது
       ஆசை எதிலும் குறியாது
துச்சம் தனதுயிர் எனவெண்ணித்
       துன்பம் நீக்கிடத் துணைபண்ணும்
பச்சைக் குழந்தையின் களிப்போடும்
       பழுத்தநற் கிழவரின் விழிப்போடும்
விச்சை புரிந்தது காந்திமகான்
       விடுதலை தரவரும் சாந்தவழி.       4

கோழைத்தனம்அதில் கிடையாது
       கொள்கையில் சோர்வு அடையாது
வாழைக் கனியினும் மென்மையது
       வயிரம் உருக்கெனும் வன்மையது
கூழைக் கும்பிடு போடாது
       கொச்சை வெற்றிகள் நாடாது
ஏழை எளியவர் குறைநீக்கும்
       எண்ணம் ஒன்றே அதன்நோக்கம்.       5

விஞ்ஞானத்தின் வேகத்தால்
       விரிந்துள எந்திர மோகத்தால்
அஞ்ஞா னங்கள் மிதமிஞ்சி
       அழித்திடு மோதமை என அஞ்சும்.