தாதாபாயும் ஏ.ஓ.ஹ்யூமும் தம்பொடு வெடர்பானும் மாதா இந்திய நாட்டுக்(கு) உதவிய மலையரண் காங்கிரசே. 3 அன்றவர் ஊன்றிய ஆலினும் சிறுவிதை அடர்ந்துயர் மரமாகி இன்றுநம் நாட்டினில் யாவரும் நிழல்பெற இலங்கிடும் காங்கிரசே. 4 ஏழை எளியவர்க்(கு) என்றும் உழைப்பதும் இந்திய காங்கிரசே கோழைத் தனமது நம்மைவிட்(டு) ஓடிடக் கொடுத்தது காங்கிரசே. 5 நிலவளம் நீர்வளம் சிறந்தது உலகினில் நிகர்சொல்ல முடியாத பலவள நாட்டினில் பஞ்சம் ஏன்எனப் பதைப்பது காங்கிரசே. 6 அறநெறி வகைகளும் அரசியல் முறைகளும் அன்னியர்(கு) உதவினநாம் பிறநெறி மயக்கினில் பேதுறல் ஏன்?எனப் பேசிடும் காங்கிரசே, 7 வீரரும் தீரரும் விளங்கிய நாட்டினில் வீணர்கள் ஆவோமோ! ஓரமும் வஞ்சமும் ஒழிந்திட எழுந்ததும் உழைப்பதும் காங்கிரசே. 8 ஜாதியும் மதங்களும் சமரசம் எய்திடத் தரிப்பது காங்கிரசே. நீதியும் சுகங்களும் யாவரும் அடைந்திட நினைப்பது காங்கிரசே. 9 |