உருபுலன் மனஒ ழுங்கால் உன்னுளே உலகாள் தேவன் வரும்வரும் பஜகோ விந்தம்; வலியவே பஜகோ விந்தம். 31 குறிப்புரை:- துரு - உபாயம், களிம்பு; துரிதமாய் - விரைவாய்; மூர்க்கர் - கீழ்மக்கள்,இழிஞர்; பேதம் - வேறுபாடு; மேது - அறிவு; பகர்ந்திட - சொல்ல. 179. ஸ்ரீ பகவத் கீதை : ஸாங்கிய யோகம் இரண்டாம் அத்தியாயம் அர்ச்சுனன் கேட்கிறான் : கோவா விளங்கச் சொல்வாய் கெட்டியாம் அறிவு பெற்றோன் பேசுமா றெவ்வா(று) அன்னான் பிறரிடம் என்ன சொல்வான்? ஆசிலா அவனுக் குள்ளே அடையாளம் யாது? அந்தத் தேசுளான் எதனைச் செய்வான்? தேர்ந்திடும் பலன்தான் என்ன? 1 ஸ்ரீபகவான் சொல்லுகிறார் : பார்த்த! கேள் சொல்லு கின்றான், பலமுள்ள அறிஞன் தன்மை; ஆர்த்தெழு மனத்தில் தோன்றும் ஆசைகள் அனைத்தும் நீக்கித் தீர்த்தபின் ஆத்மா தோன்றும் தெரிந்துளே மகிழ்வா னாயின் நீத்தவன் அவனே என்ப நிச்சய புத்தி பெற்றோன். 2 |