| | பெண்மதிமாலை |
| | ஊரிற்பெண் கள்கொண்ட சீரினை யாகிலும் உற்றுப் பாரு மைய மாரே பாரி தனைநாவில் வைத்தான் பிதாமகன் பாகஞ் சிரம்வைத்தான் சிவன்மா சுகன் மார்பில் வைத்தான் ஹரி பெண்திருடன் குகன் மங்கை தேடிச்சந்தி வந்தான் கரிமுகன் |
| | (கேளும்) 3 |
| | உங்கட் குதவியா யெங்களைத் தேவனுண் டாக்கிய தையறி யீரோ-செல்வ மங்கையுடன் கல்வி நங்கைமு தலானோர் மாதரென் றுகுறி யீரோ எங்களை யல்லாமல் நீங்கள் உதித்தீரோ ஏறிய காயத் திருந்து குதித்தீரோ அங்கப்பா லுண்ணாமல் தேகம் உதித்தீரோ அடிமையென் றெங்கள் தலையில் விதித்தீரோ |
| | (கேளும்) 4 |
| | போதக யூரோப்பு மாதர்க ளைக்கண்டு பொங்கிப் பொறாமைகொண் டோமே-என்றும் பேதமில் லாஇந்தி யாதனில் நாங்கள் பிறந்தென்ன லா பங்கண் டோமே நாதக் கல்விக்கு நகை எந்த மூலையே நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே வேதநா யகன்செய் பெண்மதி மாலையே வேண்டினோம் தாரும் விடோம்உங்கள் காலையே |
| | (கேளும்) 5 |