| | தங்களைப் படிப்பிக்கும்படி பெண்கள் வேண்டுதல் |
| | ராகம் - மோகனம்] | [தாளம் - ஆதி |
| | பல்லவி |
| | கேளும்-புமான்களே-கிருபைவைத் தாளும் சீமான்களே |
| | அநுபல்லவி |
| | நாளுங் கதியில்லா எங்கள்மேல் வர்மமோ தாளுறுந் தூசிபோல் தள்ளுதல் தர்மமோ (கேளும்) |
| | சரணங்கள் |
| | காலைக்கு மாலைக்கு மூலைக்குள் எங்களை ஆலைக் கரும்புபோல் தேய்த்தீர்-பாக சாலைக்கும் மன்மத லீலைக்கும் மேவின வேலைக்கும் எங்களை மாய்த்தீர் மூலைக்கல்வி நாங்கள் வாசித்தா லாபத்தோ மூடப்பெண் கொள்வீரு மக்குப்பெ ரும்பித்தோ ஓலைக்கி ரந்தங்க ளுங்கள்பாட் டன்சொத்தோ உமக்கென்ன காணுந் தலைமேற்றலை பத்தோ |
| | (கேளும்) 1 |
| | ஆதியிற் பெண்ணாலே மேதினி யோர்களுண் டான வகைமறந் தீரோ-பெண் சாதி புருடனிற் பாதியென் னமனு நீதியை யுந்துறந் தீரோ பாதியு டலைப்ப றக்கவி டலாமோ பாவபுண் ணியந்தெரி யாமற்கெ டலாமோ நீதியில் லாதெம்மை நிந்தித் திடலாமோ நிந்தித்தும்பின் னெங்களை நீர்தொட லாமோ |
| | (கேளும்) 2 |
| | நாரிய ரைஒரு காரிய மில்லா நடைப்பிண மென்றெண்ணி னீரே-தேவர் |