பக்கம் எண் :

186சமுதாய வீதி

புகழ்ந்திருக்கீங்க! அட்சரலட்சம் கொடுக்கலாம் இதுக்கு.

     ‘‘நிஜமாச் சொல்றீயா, அல்லது உன்னைப் புகழ்ந்ததுக்காகப் பதிலுக்கு
என்னைப் புகழணும்னு புகழறியா?...’’

     ‘‘நீங்க அதைச் சொல்றப்ப கேக்கறதுக்கு அழகாயிருந்திச்சு, புகழ்ந்தேன்-’’

     அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது
கோபாலிடமிருந்து ஃபோன் வந்தது. மாதவி தான் ஃபோனை எடுத்துப்
பேசினாள்.

     ‘‘இன்கம்டாக்ஸ் விஷயமா ஒருத்தரை அவசரமாப் பார்க்க
வேண்டியிருக்கு. நான் இன்னிக்கு அங்கே வர்ரத்துக்கில்லே மன்னிச்சுக்க...’’

     ‘‘இப்படிச் சொன்னா எப்படி? நீங்க அவசியம் வரணுமே! நானும்
வசனகர்த்தா சாரும் ரொம்ப நேரமா உங்களை எதிர்பார்த்துக் காத்துக்
கிட்டிருக்கோம்.’’

     ‘‘இல்லை! இன்னிக்கு முடியும்னு தோணலை எனக்கு, முத்துக்குமாரு
வாத்தியாரிடம் சொல்லிடு.’’

     - அவள் முகம் மெல்ல இருண்டது. ஃபோனை வைத்துவிட்டு. ‘‘அவரு
வரலியாம். யாரோ இன்கம்டாக்ஸ் ஆளைப் பார்க்கப் போகணுமாம்’’ என்று
முத்துக்குமரனை நோக்கிக் கூறினாள் மாதவி.

     ‘‘அதுக்கென்ன உனக்கு இவ்வளவு சடைவு?’’

     ‘‘சடைவு ஒண்ணுமில்லே, வர்றேன்னு சொல்லி ஒப்புக் கொண்டப்புறம்
திடீர்னு இப்படிச் சொல்வதைக் கேட்டா என்னவோ போலிருக்கு.

     ‘நான் ஒண்ணு கேக்கறேன் மாதவி, வித்தியாசமா நினைச்சுக்க
மாட்டியே?’’

     ‘‘என்ன?...கேளுங்களேன்...’’

     ‘‘இன்னிக்கு விருந்துக்கு கோபால் வந்து நான்