பக்கம் எண் :

மனோன்மணீயம்
116

வாரும்! வாரும்! இருமின் யாவரும்.

நாரா,வீணாய் வெற்றுரை விளம்பலை வேந்த!
காணா யஃதோ! அவர்விடுங் கண்ணீர்.

(சேவகர் அழுதலை நோக்கி)


ஜீவ, வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது?

முதற்சேவ, 75.

பருதி கண்டன்றோ பங்கயம் அலரும்?
அரச நீ துயருறி லழுங்கார் யாரே?


ஜீவ,

பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்!
இழந்தன முற்று மென்றோ வெண்ணினீர்!
அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை?

80.

மும்மையி லிம்மியு முண்மையி லிழந்திலம்.
வெல்லுவ மினியும் : மீட்போம் நம்புகழ்.
அல்லையேற் காண்மின்!


நாரா, 

அதற்கென் ஐயம்?

இறைவ! இப் போதுநீ இசைத்தவை சற்றுங்
குறைவிலை. தகுதியே. கூறியபடியே

85.

ஆவது காண்குவம். அழகா ரம்புயப்
பூவின துயர்வு பொய்கையி னாழத்
தளவா வதுபோல், உளமது கலங்கா
ஊக்க மொருவன தாக்கத் தளவெனத்
துணிவார்க் குறுதுயர் தொடுமுன் எவ்வும்

90.

அணியார் பந்துறு மடிபோல், முயற்சியில்
இயக்கி யின்பம் பயக்குமென் றிசைக்குஞ்
சான்றோர் சொல்லுஞ் சான்றே யன்றோ?
ஆதலி னிறைவநீ யோதிய படியே
உள்ளத் தெழுச்சியு முவகையோ டுக்கமும்

95.தள்ளா முயற்சியுந் தக்கோர் சார்பும்,

(குடிலனும் பலதேவனும் வர)

உண்டே லூழையும் வெல்லுவம், மண்டமர்
அடுவதோ வரிது வடிவே லரசே!


குடில, (தனதுள்)இப்பரி சாயரசி ருப்பது வியப்பே!