| | தக்கோ ரென்றனன் சாற்றிய தென்னோ! | | | (அழுவதாகப் பாவித்து ஒருபுறம் ஒதுங்கி முகமறைத்து நிற்க.) |
| ஜீவ, | 100. | ஏனிது குடில! ஏன்பல தேவ! ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ! |
| .குடில, | | அடியேன், |
| ஜீவ, | | வருதி யிப்புறம்! வருதியென் னருகே! |
| குடில,(அழுது) | | திருவடிச் சேவையில் - |
| ஜீவ, | | செய்தவை யறிவோம். |
| குடில, (ஏங்கி) | | ஜனித்தநாள் முதலா - |
| ஜீவ, | | உழைத்தனை! உண்மை! |
| குடில, | 105. | உடல்பொரு ளாவி மூன்றையு மொருங்கே- |
| ஜீவ, | | விடுத்தனை உண்மை. விளம்பலென்? |
| குடில, | | உண்மையிற் | | | பிசகில னென்பது- |
| ஜீவ, | | நிசம்! நிசம்! அறிவோம்! |
| குடில,(விம்மி.) | | எல்லா மறியு மீசனே சான்றெனக்கு | | | அல்லா லில்லை - |
| ஜீவ, | | அனைவரு மறிவர். |
| குடில, | 110. | அருமை மகனிவ னொருவன் - |
| ஜீவ, | | அறிகுவம் |
| குடில, | | பாராய் இறைவ-(பலதேவன் மார்பினைச் சுட்டிகாட்டி) |
| ஜீவ,. | | (பலதேவனை நோக்கி.) வாராய் |
| குடில, | | இப்புண் | | | ஆறுமா றென்னை? தேறுமா றென்னை? உன்னரு ளன்றிமற் றென்னுள தெமக்கே- |
| ஜீவ, | | அம்பின் குறியன்று, யாதிது? |
| குடில, | | அடியேம், |
| | 115. | அன்பின் குறியிது! |
| ஜீவ, | | ஆ! ஆ! |
|
|
|