| | பொல்லாப் பகைவர்-பொய்யர்-அவர்பலர்.- இல்லா தாக்குவ ரிறைவ! என் மெய்ம்மை- (அழ) |
| ஜீவ, | | வெல்வோம் நாளை! விடு விடு துயரம், |
| குடில,(தனதுள்) | | அறிந்திலன் போலும் யாதும்! (சிறிதுளந் தெளிந்து) |
| 120. | வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில் வெற்றியுந் தோல்வியும் உற்றிட லியல்பே : அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்! |
| குடில,(தனதுள்) | | சற்று மறிந்திலன்! என்னையென் சமுசயம்! |
| ஜீவ, | | முற்றிலும் வெல்லுதும் நாளை, அதற்கா |
| 125. | ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர் நணுகினும் நாளை - |
| | அணுவள வேனு மிலையிலை யயிர்ப்பு. நெடுநா ளாகநின்பணி விடைக்கே யுடலோ டாவியா னொப்பித் திருந்தும், |
| 130. | கெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில் விடுமா றறியா வெட்கமில் பதடியாய்க் கொடியார் சிலர்செய் கொடுஞ்சூ ததனால் தடுமா றடைந்தென் தகைமையும் புகழுங் கெடுமா றுகுத்த கெடுமதி யொன்றே |
| 135. | கருத்திடை நினைதொறுங் கண்ணிடு மணல்போல், உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும், பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலங் கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்! அடுபோர்க் களத்தியாண் டடைந்திலன்! ஐயோ! |
| 140. | வடிவே லொன்றென் மார்பிடையிதுபோற் |
| | படுமா றில்லாப் பாவியே னெங்ஙனம் நோக்குவன் நின்முகம்? காக்குதி! ஐயோ! தாக்குறு பகைவர் தம்படை யென்னுயிர் |
|
|
|