பக்கம் எண் :

மனோன்மணீயம்
119

போக்கில. நீயே போக்குதி! காக்குதி!
145.

இரக்கமுற் றுன்றிருக் காத்துறை வாளிவ்
உரத்திடை யூன்றிடி லுய்குவன். அன்றேல்-(அழுது)


ஜீவ, உத்தம பத்தியி லுனைப்போல் யாரே!

நாரா,(தனதுள்)

மெத்தவு நன்றிந் நாடகம். வியப்பே!
மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்?

150.

போரிடை யுளதன் றியார்செய் தனர்பின்?
உணர்குவம். இப்பேச் சோய்விலாப் பழங்கதை.

(நாராயணன் போக)


குடில,

சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில்,
இத்தனை கருணையு மெனக்கென அருளுதி.
பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா

155.

யாதுமொன் றெனக்கா விரந்திலன். உணர்வை.
ஓதிய படியென் னுரங்கிழித் துய்ப்பையேற்
போதுமிங் கெனக்கு. அப்போதலோ காண்குவர்
மன்னுல குள்ளா ரென்னுள நிலைமை!
உன்பெயர்க் குரிய வொவ்வோ ரெழுத்தும்

160.

என்னுரத் தழியா எழுத்தினி லெழுதி
யிருப்பது முண்மையோ இலையோ என்பது
பொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே. 

(முழந்தாளூன்றி நின்றழ)


ஜீவ,

அழுவதென்? எழு ! எழு ! யா ரறியார்கள்!
உன்னுளம் படும்பா டென்னுள மறியும்.

165.

என்னநு பவங்கேள் குடிலா! ஈதோ
சற்றுமுன் யானே தற்கொலை புரியத்
துணிந்துவா ளுருவினேன். துண்ணென நாரணன்,
அணைந்தில னாயினக் காலை -


குடில, 

ஐயோ!


ஜீவ, தடுத்தான் ; விடுத்தேன்!

குடில,(தனதுள்)

கெடுத்தா னிங்கும்!


ஜீவ, 170.அரியே றன்ன அமைச்ச! பெரியோர்