பக்கம் எண் :

மனோன்மணீயம்
120

தரியார் ; சகியார் சிறிதொரு சழக்கும்.
ஆயினு மத்தனை நோவதற் கென்னே?
வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக்
கருதினோம்! உறுத! வெருவியோ மீண்டோம்?


குடில, 175.

வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு.
மீண்டதிற் குறைவென்? ஆ! ஆ! யாரே
வெருவினார்? சீ! சீ! வீணவ் வெண்ணம்!
இருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென்
றொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய்

(நாராயணன் நின்றவிடம் நோக்கி)

180.

சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி!
அதுவலா லென்குறை மதிகுல மருந்தே!
சென்றுநா மின்று திரும்பிய செயலே
நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர்.
செவ்விதி லோடிநாய் கௌவிடும் : சிறந்த

185.

மடங்கலோ வெதற்கும் மடங்கியே குதிக்கும்.
குதித்தலும் பகையினை வதைத்தலு மொருகணம்.
நாளை நீ பாராய்! நாந்தூ தனுப்பும்
வேளையே யன்றி விரிதலை யனந்தை
யூரா ரிவ்வயி னுற்றதொன் றறியாச்

190.

சீராய் முடியுநஞ் சிங்கச் செருத்திறம்!
மீண்டோ மென்றுஉனித் தூண்டிலின் மீனென
ஈண்டவ னிருக்குக : இருக்குக. வைகறை
வரும்வரை யிருக்கில் வந்தவிவ் வஞ்சியர்,
ஒருவரும் மீள்கிலர். ஓர்கால் இக்குறி

195.

தனக்கே தட்டிடில் தப்புவ னென்பதே
யெனக்குள துயரம். அதற்கென் செய்வோம்?
ஆதலி னிறைவ! அஞ்சினே மென்றொரு
போதுமே நினையார் போர்முறை யறிந்தோர்.


ஜீவ, எவ்வித மாயினு மாகுக, வைகறை,
200.

இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும்
அதுவெலா மகலநின் றரும்போ ராற்றுதும்.


குடில,

வஞ்சியா னிரவே யஞ்சிமற் றெழிந்திடில்