| | உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே. |
| குடில, | 205. | சரி! சமா தானஞ் சாற்றவே சார்ந்தான். |
| ஜீவ, | | பெரிதே நின்மதி! ஆ! ஆ! வரச்சொல். |
| தூதன். | | தொழுதனன், தொழுதனன், வழுதி மன்னவா! |
| | அருளே யகமாத் தெருளே மதியா அடலே யுடலாத் தொடைபுக ழேயா |
| 210. | நின்றவென் னிறைவ னிகழ்த்திய மாற்றம் ஒன்றுள துன்வயி னுரைக்க வென்றே விடுத்தன னென்னை யடுத்ததூ துவனா. இன்றுநீ ரிருவரு மெதிர்த்ததில் யாவர் வென்றன ரென்பது விளங்கிடு முனக்கே. |
| 215. | பொருதிட இனியுங் கருதிடில் வருவதும் அறிகுவை! அதனா லறிகுறி யுட்கொண் டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே யுன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு கும்பநீரு மோர் நிம்ப மாலையும் |
| 220. | ஈந்தவ னாணையில் தாழ்ந்திடில் வாழ்வை! மதிற்றிற மதித்திறு மாப்பையேல் நதியிடை மட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே. ஆதலி னெங்கோ னோதிய மாற்றம் யாதெனிற் கைதவா! வைகறை வருமுன் |
| 225. | தாரு நீருநீ தருவையேற் போரை நிறுத்துவன். அல்லையேல் நின்புரம் முடிய ஒறுத்திட உழிஞையுஞ் சூடுவன். இரண்டில், எப்படி யுன்கருத் தப்படி யவற்கே. |
| ஜீவ, | | நன்று! நன்று! நீ நவின்றனை. சிறுவன் |
| 230. | வென்றதை நினைத்தோ அலதுமேல் விளைவதைக் கருதித் தன்னுளே வெருவியோ வுன்னை |
|
|
|