| | விடுத்தன னென்பதிங் கெடுத்துரை யாதே யடுத்திவ ணுள்ளா ரறிகுவர். ஆயினும், மற்றவன் தந்தசொற் குற்றநம் விடை |
| 235. | சாற்றுதுங் கேட்டி, தன்பொரு ளாயின் ஏற்றிரந் தவர்க்கியாம் யாதுமீந் திடுவோம். அருந்திடச் சேர னவாவிய புனலும் விரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம் வரும்பாரம் பரைக்கா மல்லா லெனக்கே |
| 240. | யுளவல ; அதனா லொருவனீந் திடுதல் களவெனக் காணுதி. மற்றுநீ கழறிய வுழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில் நொச்சியு முளதென நிச்சயங் கூறே. |
| தூது, | | ஐயோ! கைதவா! ஆய்ந்திலை உன்றன் |
| 245. | மெய்யா மியல்பு. மிகுமுன் சேனையின் தீரமுந் திறமும் உனதரும் வீரமுங் கண்முற் படுமுன் கவர்ந்தேச ரற்கிம் மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை? என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்! |
| குடில, | 250. | நில்லாய் தூதுவ! நின்தொழி லுன்னிறை சொல்லிய வண்ணஞ் சொல்லி யாங்கள் தரும்விடை கொடுபோய்ச் சாற்றலே யன்றி விரவிய பழிப்புரை விளம்புத லன்றே. அதனா லுன்னுயி ரவாவினை யாயின் |
| 255. | விரைவா யேகுதி விடுத்தவ னிடத்தே. |
| தூது, | | குடிலா! உன்மனப் படியே! வந்தனம். மருவிய போரினி வைகறை வரையிலை. இரவினில் வாழுமின் இவ்வா னகத்தே. (தூதுவன் போக) |
| குடில, | | தூதிது சூதே, சொன்னேன் அன்றோ? |
| ஜீவ, | 260. | ஏதமில் மெய்ம்மையே யாயினு மென்னை? நீருந் தாரும் யாரே யளிப்பர்? எனவோ வவைதாம்? யாதே வரினும் |
|
|
|