| குடில, | | சென்றது செல்லுக. ஜயிப்போம் நாளை, | | | 75. | ஒன்றுநீ கேட்கி லுளறுவ னாயிரம். கெடுநா வுடையான். கேட்டினி யென்பயன்? | | ஜீவ, | | விடுவே மல்லேம. வெளிப்படை. கேட்பதென்? எழுமுன் னவன்கழு வேறிடல் காண்குதும். | | குடில, | | தொழுதன னிறைவ! பழமையன்! பாவம்! | | 80. | சிறிதுசெய் கருணை. அறியான்! ஏழை! | | ஜீவ, | | எதுவெலாம் பொறுக்கினு மிதுயாம் பொறுக்கிலம். எத்தனை சூதுளான்! எத்தனை கொடியன்! | | குடில, | | சுத்தன்! | | ஜீவ, | | சுத்தனோ? துரோகி! துட்டன்! | | | (நாராயணன் உள்ளே வர) | | | இட்டநங் கட்டளை யென்னையின் றுனக்கே? | | | (முருகன் முதலியோர் வாயிலில் நிற்க) | | நாராயணன். | 85. | எப்போ திறைவ! | | ஜீவ, | | இன்றுபோர்க் கேகுமுன்! | | நாரா, | | அப்போ தாஞ்ஞையா யறைந்ததொன் றில்லை. கடிபுரி காக்கவென் றேவினன் குடிலன். | | ஜீவ, | | குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்! | | நாரா, | | குடிலனைக் குடிலனென் றேயுட் கொண்டுளேன். | | ஜீவ, | 90. | கெடுவாய்! இனிமேல் விடுவாய் பகடி! குடிலனென் னமைச்சன். | | நாரா, | | நெடுநா ளறிவன்! | | ஜீவ, | | நானே யவனிங் கவனே யானும். | | நாரா, | | ஆனால் நன்றே. அரசமைச் சென்றிலை | | ஜீவ, | | கேட்டது கூறுதி. | | நாரா, | | கேட்டிலை போலும்! | | ஜீவ, | 95. | கடிபுரி கரத்தைகொல்? | | நாரா, | | காத்தேன் நன்றாய். | | ஜீவ, | | காத்தையே லகழ்க்கணந் தூர்த்ததென் பகைவர்? |
|
|
|