நாரா, | | தூர்த்ததுன் பகையல. துரத்திய படைப்பிணம். பார்த்துமேற் பகருதி. | ஜீவ, | | பார்த்தனம் உன்னை | | | ஆர்த்தபோர்க் களத்திடை. அதுவோ காவல்? | நாரா, | 100. | உன்னையுங் காத்திட வுற்றனன் களத்தில், | ஜீவ, | | என்னையுன் கபட நாடகம்? இனிதே! | | | அவனுரம் நோக்குதி, அறிவைகொல்? | | | (பலதேவனைக் காட்டி) | நாரா, | | அறிவேன். | ஜீவ, | | எவனது செய்தவன்? | நாரா, | | அவனே யறிகுவன். | ஜீவ, | | ஒன்றும் நீ யுணர்கிலை? | நாரா, | | உணர்வேன். இவன்பால் | | 105. | நின்றதோர் வீரன்:இப் பொற்றொடி யுடையான் : “என்தங் கையினிழி விப்படி யெனக்கே” என்றுதன் கைவே லிவனுரத் தெற்றிப் பொன்றின னெனப்பலர் புகல்வது கேட்டேன். | ஜீவ, | | நன்றுநன் றுன்கதை! | குடில, | | நன்றிது நன்றே! | | | (பொற்றொடி காட்டி) | | 110. | பூணிது நினதே! அரண்மனைப் பொற்றொடி. காணுதி முத்திரை! வாணியுஞ் சேர்ந்துளாள். இச்செயற் கிதுவே நிச்சயங் கூலி. அடியேந் தமக்கினி விடையளி. அகலுதும். அஞ்சிலே முடலுயிர்க் கஞ்சுவம் மானம். | | 115. | வஞ்சகர் கெடுப்பர். வந்தனம். | | | (தன்முத்திரைமோதிரங் கழற்றி நீட்ட) | ஜீவ, | | நில்! நில்! | (நாராயணனை நோக்கி) | | இத்தனை சூதெலா மெங்குவைத் திருந்தாய்? உத்தமன் போலமற் றெத்தனை நடித்துளாய் சோரா! துட்டா! சுவாமித் துரோகி! |
|
|
|