| | வாரா யமைச்ச! வாரீர் படைகாள்! |
| | (முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர) |
| 120. | நாரா யணனிந் நன்றிகொல் பாதகன், இன்றியா மிவனுக் கிட்டகட் டளையும் நன்றியு மறந்து நன்னகர் வாயிற் காவல் கைவிடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும், மேவருந் தொடியிதெங் கோவிலில் திருடியும், |
| 125. | ஏவலர்க் கதனையீந் தேபல தேவன் ஓவலி லுயிரினை யுண்டிடத் தூண்டியும், அநுமதி யின்றியின் றமர்க்களத் தெய்திக் கனைகழற் படைபரி கரிரதங் கலைத்துச் சுலபமா யிருந்தநம் வெற்றியுந் தொலைத்துப் |
| 130. | பலவழி யிராஜத் துரோகமே பண்ணியும் நின்றுளான். அதனால் நீதியா யவனை யின்றே கொடுங்கழு வேற்றிட விதித்தோம்! அறிமின் யாவரும்! அறிமின்! அறிமின்! சிறிதன் றெமக்கிச் செயலால் துயரம். |
| 135. | இன்றுநேற் றன்றெனக் கிவனுடன் நட்பு. |
| நாரா, | | வெருவிலேன் சிறிதும் வேந்தநின் விதி்க்கே! அறியா யாயி னிதுகா றாயும் வறிதே மொழிகுதல்! வாழ்க நின்குலம்! |
| ஜீவ, | | நட்பல : மக்களே யாயினென்? நடுநிலை |
| 140. | யற்பமு மகலோம். ஆதலி னிவனை | | | (படைத்தலைவரை நோக்கி) | | | நொடியினிற் கொடுபோ யிடுமின் கழுவில்! |
| முருகன். | | அடியேம். நொடியினி லாற்றுது மாஞ்ஞை. குடிலரே வாரும்! |
| முருகன். | | கூறிய பலவும், குடிலரோ டொவ்வும். |
| 145. | வேறியார் பிழைத்தனர் வேந்தமற் றின்றே? |
| குடில, | | கேட்டனை யிறைவ! கெடுபயல் கொடுமொழி. |
|
|
|