| நாரா, | | முருகா ! சீ ! சீ ! | | | (முருகனை அருகிழுத்து) | | ஜீவ, | | மாட்டுதிர் இவனையும் வன்கழு வதனில் | | | (சேவகனை நோக்கி) | | முருக, | | ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும். | | | (வாயிற் சேவகன் வர) | | சேவ, | 150. | சுந்தர முனிவர் வந்தன ரவ்வறை. சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம். | | | | | ஜீவ, | | வந்ததெவ் வழியிவர்! வந்தனங் குடிலா! நடத்துதி யதற்குள் விதிப்படி விரைவில். | | | | | குடில, | | மடத்தனத் தாலிவர் கெடுத்தனைப் புகல்வர் ; | | | 155. | விடுத்திட வருளாய்! | | ஜீவ | | விடுகிலம். | | குடில, | | ஆயின், | | | அடுத்துநின் றிதுநீ நடத்தலே யழகாம். | | ஜீவ,(தன் சேவகனை நோக்கி) | | அடைத்திடு சிறையினில். அணைகுதும் நொடியில் | | | | (ஜீவகன் போக) | | குடில, | | சடையா! கொடுபோ யடையாய் சிறையில். | | | (சடையன் அருகே செல்ல) | | முருக, | | அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம். | | | (சடையன் பின்னும்நெருங்க) | | 160. | வேணுமோ கோணவாய் விக்கா! | | சடையன் | | கொக் கொக்! | | | (விக்கி) | | முருக, | | கூவலை! விடியுமுன் கூவலை! | | சடையன். | | கொக்கொக். | | சேவகா் யாவரும். | | சேவலோ! சேவலோ! சேவலோ! சேவலோ! | | | | (கைதட்டிச் சிரித்து) | | குடில, | | ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்! வீதியிற் செல்லலை. வீணர்! அபாயம்! | | | | | 165. | ஒழிகுவ மிவ்வழி! வழியிது! வா! வா! | | | (குடிலனும் பலதேவனும் மறைய) |
|
|
|