| சேவகரிற் சிலர். பிடிமின் சடையனை ! |
| (சடையனும் குடிலன் சேவகரும் ஓடிட, சிலபடைஞர் துரத்திட,சிலரார்த்திட) |
| மற்றைய சேவகர் | | பிடிமின்! பிடிமின்! |
| சேகரிற் சிலர் குடிலனெங் குற்றான்? |
| சேவ,ரிற் சிலர். | | விடுகிலங் கள்வரை! |
| மற்றைய சேவ, | | பிடிமின்! பிடிமின்! |
| | (கூக்குரல் நிரம்பிக் குழப்பமாக) |
| நாரா,(ஒரு திண் | | முருகா! நிகழ்பவை சரியல சிறிதும். |
| வணயிலேறி நின்று) | | அருகு நில். சீ! சீ! அன்பரே அமைதி! |
| | (குழப்பங் குறைந்து அமைதிசிறிது பிறக்க) |
| முதற்சேவகன். | | அமைதி! அமைதி! |
| நாரா, | | நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட வாசை! சொல்லவோ? |
| | (குழப்பந் தீர) | | சேவ,ரிற்சிலர். | | சொல்லுதி, |
| | (சிறிது சிறிதாய்ப் படைஞர்நெருங்கிச் சூழ) |
| சேவகா் யாவ, | | சொல்லாய்! சொல்லாய்! பல்லாயி ரந்தாம்! |
| நாரா, | 175. | நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பி னறியா வென்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்! |
| | (கைகூப்பி) | | சேவகர். | | அறியா ருனையார்? அறிவார் யாரும். |
| | (முற்றிலும் அமைதி பிறக்க) |
| நாரா, | | அறிவீ ராயினும் யானென் செய்துளேன்? |
| 180. | என்செய வல்லவன்! என்கைம் மாறு! பாத்திர மோநும் பாரிவிற் கித்தனை! |
| சேவகர். | | காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ! |
| நாரா, | | கெட்டார்க் குலகி னட்டா ரில்லை! ஆயினும், வீரர்நீ ராதலின், நும்முடன் |
| 185. | ஈண்டொரு வேண்டுகோ ளியம்பிட வாசை அளிப்பிரோ வறியேன்? |
|
|
|