பக்கம் எண் :

மனோன்மணீயம்
133

சேவகர்.

அளிப்போ முயிரும்,


குடில, (பல தேவன் காதில்)

ஒளித்ததிங் குணர்வனோ? ஓ! பல தேவ!


நாரா,

ஒருதின மேனும் பொருதுளே னும்முடன்
கருதுமி னென்னவ மானமுஞ் சிறிதே.


சேவகர். 190.

உரியதே யெமக்கது. பெரிதன் றுயிரும்!

(யாவரும் கவனமாய்க் கேட்க)


குடில, (தனதுள்) 

எரியிடு வானோ இல்லிடை? ஐயோ!


நாரா,

அத்தனை யன்புநீர் வைத்துளீ ராயின்
என்மொழி தனக்குநீ ரிசைமின். எனக்காத்
தீதே யாயினுஞ் செமித்தருள் புரிமின்!


சேவ,195.

யாதே யாயினுஞ் சொல்லுக!


நாரா,

சொல்லுதும்!

போர்க்களத் துற்றவை யார்க்கும் வெளிப்படை.
ஊர்ப்புறத் தின்ன முறைந்தனர் பகைவர்.
நாற்புற நெருப்பு : நடுமயிர்த் தூக்கின்
மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை.

200.

இதனிலு மபாயமிங் கெய்துதற் கில்லை.
நுந்தமிழ் மொழியு மந்தமில் புகழுஞ்
சிந்திடும் : சிந்திடும் நுஞ்சுதந் தரமும்.
இத்தகை நிலைமையி லென்னைநுங் கடமை?
மெய்த்தகை வீரரே! உத்தம நண்பரே!

205.

எண்ணுமின் சிறிதே! என்னைநந் நிலைமை!
களிக்கவுந் கூவவுங் காலமிங் கிதுவோ?
வெளிக்களத் துளபகை, வீண்கூக் குரலிதைக்
கேட்டிடிற் சிறிதுங் கேலியென் றெண்ணார் ;
கோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர்.

210.

பெரிதுநம் மபாயம்! பேணி யதற்குநீர்
உரியதோர் கௌரவ முடையராய் நடமின்.
விடுமின் வெகுளியும் வீண்விளை யாட்டும்.
படையெனப் படுவது கரையிலாக் கருங்கடல்.
அடலோ தடையதற்கு? ஆணையே யணையாம்.

215.உடைபடி லுலகெலாங் கெடுமொரு கணத்தில்.