பக்கம் எண் :

மனோன்மணீயம்
134

கருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும்
பெருநெருப் பன்றோ? பின்பார் தடுப்பர்.
அதனா லன்பரே! ஆணைக் கடங்குமின்,


குடில, (மூச்சுவிட்டு)

ஆ!


நாரா,இதுபோ லில்லை யெனக்குப காரம்!
220.இரந்தேன். அடங்குமின்! இரங்குமி னெமக்கா!

1-ம் சேவ,

நாரா யணரே! நவின்றவை மெய்யே!
ஆரே யாயினுஞ் சகிப்ப ரநீதி?


நாரா,

ஏதுநீ ரநீதியென் றெண்ணினீர்? நண்பரே!
ஓதிய வரச னாணையை மீறி

225.

யெனதுளப் படிபோர்க் கேகிய வதற்கா
மனுமுறைப் படிநம் மன்னவன் விதித்த
தண்டனை யோவநி யாயம்? அலதியான்
உண்டசோற் றுரிமையு மொருங்கே மறந்துமற்
றண்டிய வரச குலத்திற் கபாயம்

230.

உற்றதோர் காலை யுட்பகை பெருக்கிக்
குற்றமில் பாண்டிக் கற்றமில் கேடு
பண்ணினே னென்னப் பலதலை முறையோர்
எண்ணிடும் பெரும்பழிக் கென்பெய ரதனை
யாளாக் கிடநீர் வாளா முயலலோ

235.

யாதே யநீதி? ஓதுமின். அதனால்
என்புகழ் விரும்புவி ராயின், நண்பரே!
ஏகுமி னவரவ ரிடத்திற் கொருங்கே!


1-ம் சேவ,

எங்கினி யேகுவ மிங்குனை யிழந்தே? 


2-ம் சேவ,உன்கருத் திருப்பிற் குரியதோ விவ்விதி?

நாரா.240.

கருத்தெலாங் காண்போன் கடவுள். விரித்த
கருமமே யுலகங் காணற் குரிய
ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது?
கருதுமின் நன்றாய். காக்குமின் னரசனை.
செல்லுமின், நில்லீர்! செல்லிலென் றனக்கு

245.நல்லீர் மிகவும்!