வேள் - பகுதி. 118. குரம் - காற்குளம்பு. 120. விலோதனம் - கொடி. 122. அசலத்திரள் - மலைபோன்ற தேர்க்கூட்டம். 119-122. கொய்யுளைத் திரைக் கடற் கூட்டம் - குதிரைகள் கூட்டம். மதம்பெய் மைம்முகிலீட்டம் - யானைக் கூட்டம். 123. நெல்லை - நெல்வேலி, மரூஉ. 124. அந்தோ அந்தோ - அடுக்கு, இரக்கம்பற்றியது. 144. ஆதித்தவாரம் - ஞாயிற்றுக்கிழமை. 147. ஆமைப்பலகை - ஆமை வடிவாகச் செய்யப்பட்ட பலகை, கூர்மாசனம், கூர்மம் - ஆமை. 172. காக்கைச் சுப்பன் - (இரும்படிராமன்) கிராமாந்தரப் பெயர். 185. குடகன் - சேரன். 192. படியோர் - உலகினர். 197. திருவார் - ஆர் ஒப்புப் பொருள். 202. தேற்றம் - தெளிவு. 203. சுகம் - கிளி. 209. அங்காடி - கடைத்தெரு. 211. புரை - ஒட்டை, துவாரம், துளை. 213. அந்தரங்கம் இரகசியம், அருமறை. 215. உழையுளார் - பக்க மிருப்போர், மந்திரி முதலியோர். [இக்களத்தில் சூரியாத்தமனமும் சராசரங்களிற் றோற்றும் திருவருள் வைபவமும், ஒருவாறு வருணித்தமை காண்க.] மூன்றாம் அங்கம் மூன்றாம் களம். 1. நள்ளிரா - நடுநிசி. 4. இருப்பல்- இருப்பேன். அல் ஈற்று வினைமுற்று. 11. கையறு - செயலற்ற. (மிகுந்த) துன்பநிலை. 13. அரவம் - சத்தம். 15. கீண்டல் - கிளறுதல், கீள் பகுதி. 23. கண்ணுளார் - கண்ணுக்குளிருக்கின்றார். 25. எண்ணவும் படாஅர் - நினைக்கப்படவு மாட்டார். எண்ணுருளும் உளார் - நினைக்கப்படவு மிருக்கின்றார், மதிக்கப்படுதலுமுள்ளவர். 29. சித்திரரேகை - சித்திரலேகை, வாணாசுரன் மகள் உஷையின் தோழி. 32. பாடு - துன்பம். 34. உளை - உள்ளாய். 34. [கண்டு பழகும் பாக்கியம் நாம் பெற்றிலேம் என்பது கருத்து.] 36. தேக்கிய - தங்கிய. 37. ஒவ்வும் - பொருந்தும். சிவகாமி சரிதம் உரை 1. மௌனம் - வாய் பேசாமையும் மனம் விடயத்திற் செல்லாதிருத்தலும். இது மோனம் என்று வழங்கப்பெறும். 'மோனம் என்பது ஞான வரம்பு' என்பது ஒளவை அருண் மொழி. ’ம் - தபம்;தபித்தல் அதாவது ஒறுத்தல் - வருத்துதல் மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்கலும் கோடைக் காலத்தில் வெயிலில் நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல் தவமாம். சுழன்று - சுற்றி;சுழல் பகுதி. தான் உண்மைக் காதலனை
|