பக்கம் எண் :

மனோன்மணீயம்
214

ராவால்" என்ற பெருமாள் திருமொழியடியின் கருத்தமைதி கொண்டது.

85-87. 'நீரளவே யாகுமாம் நீராம்பல். இது, "வெள்ளத்தனைய மலர் நீட்டம்" குறள் அதி. 60 செ. 5 என்ற அடிக்கருத்து. அம்புயம் - அம்பு + ஜம் - நீரில் தோன்றுவது.

89. எவ்வும் - உயரும், எழும்.

96. ஊழையும் - வினைப்பயனையும்.

112. தேறுமாறு - தெளியும்விதம்.

185. மடங்கல் - சிங்கம்.

208-209. அருள் முதலியன அகம் முதலியனவாக உருவகிக்கப்பட்டுள்ளன.

219. நிம்பமாலை - வேப்பந்தார், இது பாண்டியற்குரிய மாலை.

222. மட்பரி - மண் குதிரை.

242-243. நொச்சி - பகைவர்க்கு எதிரில் நிலைநின்று தம்மதில் காப்போர்க்கு உரிய பூமாலை. உழிஞை - மதிலை முற்றுகை செய்யும் வீரர் அணியும் பூ.

263. ஒல்கலை - தளராதே.

264-265. "சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின், பட்டுப்பாடுன்றுங் களிறு" குறள் அதி. 60. செ. 7. உம்பல் - ஆண் யானை.

270-271. "நாணகத் தில்லாரியக்கம் மரப்பாவை, நாணால் உயிர். மருட்டியற்று" குறள் அதி. 102, செ. 10.

272-273. "ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று" குறள் அதி. 97 செ.7.

282. இருமுறை - போர்க்களத்திலும், தற்கொலை புரிய எத்தனித்த போதும். தப்பிலி - தப்புதலுள்ளவன், தப்புதலில்லாதவன்.

290. பகைக்கலை - விரோதம்பண்ணாதே.

291 [பிரியப்படுகை - காமித்தல். காமவழி நேரிட்ட பகையாதலால்.]

296. நிணம்படும் - கொழுப்புப் பொருந்திய.

297. மிண்டலைவறிதே - வீணாகப் பேசாதே. மிண்டுதல் - மதத்தால் அடர்த்தல்.

302. உபாயமிங்கிது - நாராயணன் மீது குற்றம் ஏற்றுதலை.

[இக்களத்தில் ஜீவகன் சோகமும் குடிலனுடைய தந்திர நடவடிக்கையும், பலதேவனுடைய கீழ்ப்படியாத் துர்க்குணமும், ஒருவாறு விளங்கலாம்.]

நான்காம் அங்கம்

நான்காம் களம்

1. ஆதி - முற்காலம்.

2. தொழுகுலம் - எவரும் வணங்கத்தக்க சிறந்த குலம்.

5. [தையலர் - மனோன்மணியின் செவிலி முதலிய அந்தப்புரத்தார்.]

6. அகழ் - கிடங்கு, தோண்டப்பட்டது.

9. களைகுதும் - களைவோம், தும் ஈற்றுத் தன்மைப்பன்மை.

16. ஆதியர் - முதன்மையானவர், தலைசிறந்தவர்.

28. கருதலர் - கருதமாட்டார்.

69. இவுளி - குதிரை.

70. கடகயம் - மதயானை.

71. கைக்குட்கனி - கையிலிருக்கும் நெல்லிக்கனிபோல் தெளிவாய்.

89. குடிலன் - வஞ்சகன்.

90. பகடி - கேலி.

106. [இது பலதேவனுடைய சோர காதலியின் சகோதரன் பலதே