பக்கம் எண் :

மனோன்மணீயம்
215

வனை வேலால் குத்தியபோது கூறியமொழி.]

107. உரத்து - மார்பில்

108. பொன்றினன் - இறந்தான்;பொன்று - பகுதி.

112. [கூலி - கைக்கூலி.Bribe.]

124. மேலரும் - பொருந்துதற்கரிய.

126. ஓவலில் - நீங்குதலில்லாத.

144. ஒவ்வும் - பொருந்தும்.

160. [கொக் கொக் - சடையனுடைய விக்கலால் எழும் ஓசை.]

198. நடுமயிர்த் தூக்கின் - நடுவிற் கட்டியிறக்கிய மயிர் உறியைப் போலும்.

220. இரந்தேன் - வேண்டினேன்.

231. அற்றம் - ஈறு, முடிவு.

253. வல்லை - விரைவு.

277. சேய் - குழந்தை.

[இக் களத்தில் குடிலன் நாராயணன் மேல் பொய்க்குற்றம் சாட்டி நிலைநிறுத்திய தந்திரமும் இராஜபக்தியின் இயல்பும் வெளியாகின்றன.]

நான்காம் அங்கம்

ஐந்தாம் களம்

1. வளையும் வேய - வளையுந் தன்மையுடைய மூங்கில். நெடுமரம் - பெருமரம் - வளையாதமரம்.

2. கிளை - கிளைகள், பெருங்கொம்பு, கிளைத்தலையுடையது, தொழிலாகுபெயர். கிளர்காற்று - பெருங்காற்று. வலிய பகைவர்முன் வணங்கியவர் பின் ஒருகாலத்தில் உயர்வு பெறுவர் என்ற உபதேசத்தை விளக்குவது 1-2 அடிகளின் உபமானம்.

3. முளை - மூங்கில். மூங்கில் புறக்காழ தாதலின் புல்லினத்தைச் சார்வது, மரமானது அகக்காழது.

6. இறினும் - கெடினும்.

8. காழ் - வைரம், உறுதி. நாணமில் நாணல் - அபாயம் வரும் பொழுது வணங்குதலால் நாணமில்லாத நாணற்புல், நதிவேகத்தில் எதி்ர்ப்படும் நாணல் என்பது அறிஞர் உரை.

23. மலைவு - மயக்கம், மான - போல.

26. துயர்க்கணம் - கணம் - கூட்டம், பல துயர்கள் என்றபடி.

30. மாநிதிவழிஞர் - பெருஞ்செல்வத்தோடு பிரயாணஞ் செய்யும் வர்த்தகர்கள்.

31. ஆர்கலன் - பொருந்திய மரக்கலம். புயல்கால் - மழைக்காற்று அல்லது பெருங்காற்று.

32. தியங்குமேல் - தியங்குமானால், கலங்குமானால். மீகான் - மீகாமன், கப்பலோட்டி.

35. வதிந்து - தங்கி.

37. ஒன்றுவன் - பொருந்துவன்.

38. உழையுளார் - பக்கமுள்ளவர் அல்லது கலத்திடமிருப்பவர்கள்.

44. திமில் - மரக்கலம் (அரசாட்சி).

46. பாய்மரம், ஈண்டு குடிலன்.

49. [கைவழி (channel)சிறுபாதை, கை - சிறுமை.]

50. தொல் - பழமை.

51. துவாத சாந்தத்துறை - பூலோக வடிவாம் விராட் புருடனுக்கும் பிரமரந்திரத்துக்கும் மேலுள்ளதோரிடமாகிய மதுரை. துவா+தச+அந்தம் - இரண்டு+பத்து+முடிவு - புருவமத்திக்குமேல் பன்னிரண்டு விரற்கிடையுள்ள இடம்.

52. நிவாதம் - வாதம் இல்லாதது, காற்றற்ற இடம், நிவாஸம் என்ற சொல்லின் திரிபாகக் கொள்ளின்