ஓம் கடவுள் துணை. மனோன்மணீயம் பாயிரம்
கடவுள் வணக்கம் நேரிசை வெண்பா
வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர் | போதமும் போய்த்தீண்டாப் பூரணமே - பேதமற | வந்தெனைநீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்காற் | சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு. |
தமிழ்த் தெய்வ வணக்கம் பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா. இவை யிரண்டும் ஆறடித்தரவு. நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ் | சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் | தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே | தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும் | அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற | எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே, | (1) |
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் | எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் | கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையாளமுந்துளுவும் | உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் | ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்துசிதையாவுன் | சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. | (2) |
இவை பன்னிரண்டும் தாழிசை.
கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில் தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே. | (1) |
|