மனோன்மணீயம்
25

ஒருபிழைக்கா அரனார்முன் னுரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.  (2)
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ யநாதியென மொழிகுவதும் வியப்பாமே.  (3)
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.  (4)
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே  (5)
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.  (6)
வடமொழிதென் மொழியெனவே வந்தவிருவிழியவற்றுள்
கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே (7)
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.  (8)
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார். (9)
பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையு மிலக்கணமில்கற்பனையே.  (10)
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி.  (11)
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.  (12)

எனவாங்கு

(தனிச்சொல்)

ஆசிரியச்சுரிதகம்

நிற்புகழ்ந் தேத்துநின் னெடுந்தகைமைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்படை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிக்ற நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையே னறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்