மனோன்மணீயம்
26

ஆயினு நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொளவோர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந்நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொண்மதி யன்பே குறியெனக் குறித்தே.

அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்

நேரிசை வெண்பா

அமைய வருளனைத்து மாட்டுமே னெஞ்சே
சுமைநீ பொறுப்பதெவன் சொல்லாய் - நமையுமிந்த
நாடகமே செய்ய நயந்தா லதற்கிசைய
ஆடுவம்வா நாண மவம்.

பாயிரம் முற்றிற்று.

வெண்பா 2 - க்கு அடி 8
கலிப்பா 1 - க்கு அடி 49
-----
ஆகப் பாயிரம் 1 - க்கு அடி57