| | அனுபவித் தன்றோ வகலும்? மனையில் |
| | தந்தையுங் கொடியன் ; தாயுங் கொடியள் ! |
| 35. | சிந்தியார் சிறிதும் யான்படு மிடும்பை. |
| | என்னுயிர்க் குயிரா மென்கா தலர்க்கும் |
| | இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம் |
| | முதலையின் பிடிபோன் முடிக்கத் துணிந்தனர். |
| | யாரோடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்? |
| 40. | வாாக்ட லுலகில் வாழ்கிலன். |
| | மாளுவன் றிண்ணம். மாளுவன் வறிதே. | 8 |
| | |
| மனோன், | | முல்லையின் முகையும் முருக்கி னிதழுங் |
| | காட்டுங் கைரவ வாயாய் ! உனக்கும் |
| | முரண்டேன்? பலதே வனுக்கே மாலை |
| 45. | சூடிடிற் கேடென்? காதால் |
| | வள்ளையி னழகெலாங் கொள்ளைகொ ளணங்கே |
| | |
| வாணி, | | அம்மொழி வெம்மொழி. அம்ம ! ஒழிதி. |
| | நஞ்சு மஞ்சிலேன் : நின்சொ லஞ்சினேன். |
| | இறக்கினு மிசையேன். தாமே துறக்கினும் |
| 50. | மறப்பனோ வென்னுள மன்னிய வொருவரை? |
| | ஆடவ ராகமற் றெவரையும் |
| | நாடுமோ நானுள வளவுமென் னுளமே? | 10 |
| | |
| மனோன், | | வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென |
| | வதியும் வதன மங்காய் ! வாணீ ! |
| 55. | பேய்கொண் டனையோ? பித்தே றினையோ? |
| | நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன் |
| | தன்மக னாகிச் சாலவும் வலியனாய் |
| | மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும் |
| | உன்னுளங் கவர்ந்த வொருவனு மொப்போ? |
| 60, | பேய்கொண் டனையோ? பேதாய் ! |
| | வேய்கொள் தோளி விளம்பர யெனக்கே. | 11 |
| | |
| வாணி, | | அறியா யொன்றும், அம்ம ! அரிவையர் |
| | நிறையழி காத னேருந் தன்மை. |