| | ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ் |
| 65. | சென்று பாய்ந்து சேருதல். திரியுங் |
| | காற்றும் பெட்புங் காரண மின்மையில் |
| | ஆற்றவு மொக்குமென் றறைவர். |
| | மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே ! |
| | |
| மனோன், | | புதுமைநீ புகன்றது, பூவைமார் காதல் |
| 70. | இதுவே யாமெனி லிகழ்தற் பாற்றே ! |
| | காதல் கொள்ளுதற் கேதுவு மிலையாம் ! |
| | தானறி யாப்பே யாட்டந் தானாம் ! |
| | ஆயினு மமைந்துநீ யாய்ந்துணர்ந் தோதுதி. |
| | உண்டோ விவாத்மி லொப்பு? |
| 75. | கண்டோ வெனுமொழிக் காரிகை யணங்கே ! |
| | |
| வாணி, | | ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்ம ! |
| | என்னுளம் போயிறந் ததுவே |
| | மன்னிய வொருவன் வடிவுடன் பண்டே. | 14 |
| | |
| மனோன், | | பித்தே பிதற்றினை, எத்திற மாயினுந் |
| 80. | தாந்த முளத்தைத் தடைசெயி லெங்ஙனம், |
| | காந்தள் காட்டுங் கையாய் ! |
| | தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே? | 15 |
| | |
| வாணி, | | ஈதெலா முனக்குயா ரோதுதற் கறிவர் ! |
| | மாதர்க் குரியதிக் காதல், |
| 85. | என்பதொன் றறியு மன்பதை யுலகே. | 16 |
| | |
| மனோன், | | மின்புரை யிடையாய் ! என்கருத் துண்மையில் |
| | வனத்தி லெய்தி வற்கலை புனைந்து |
| | மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே. |
| | சுந்தர முனிவன் சிந்துர அடியும், |
| 90. | வாரிசம் போல மலர்ந்த வதனமும், |
| | கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும், |
| | பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல் |
| | நரைதரு தலையும், புரையறு முரையும், |
| | சாந்தமுந் தயையுந் தங்கிய வுடலும், |