| 95. | மாந்தளிர் வாட்டு மேனி வாணி ! |
| | எண்ணுந் தோறுங் குதித்து |
| | நண்ணு மென்னுளம் மன்னிய தவத்தே. | 17 |
| | |
| வாணி. | | சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல் |
| | கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக் |
| 100. | காதல் கதுவுங் காலை |
| | ஒதுவை நீயே யுறுமதன் சுவையே. | 18 |
| | |
| மனோன், | | வேண்டுமேற் காண்டி. அவையெலாம் வீண்,வீண். |
| | காதலென் பதுவென்? பூதமோ? பேயோ? |
| | வெருட்டினா னாய்போ லோடிடும்; வெருவில் |
| 105. | துரத்துங் குரைக்குந் தொடரும் வெகுதொலை. |
| | அடிக்கடி முனிவரிங் கணுகுவர். அஃதோ |
| | அடுத்தவவ் வறையில் யாதோ சக்கரம் |
| | இருத்திடத் திறவுகோல் வாங்கினர் : கண்டனை ! |
| | படர்சுழி யோட பாய்திரை காட்டும் |
| 110. | வடதள வுதர வாணீ ! மங்காய் ! |
| | வரும்பொழு தரும்பொருள் கேட்போம் |
| | வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே. | 19 |
| | |
| வாணி, | | நூறாக் கேட்கினு நூலறி வென்செயும்? |
| | நீறா கின்றதென் னெஞ்சம், நாளை |
| 115. | யென்னுயிர் தாங்குவ தெவ்விதம்? |
| | மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே? | 20 |
| | |
| மனோன், | | உன்றன் சிந்தையு முந்தைதன் கருத்தும், |
| | மன்றல் வழுதிக் குரைக்க வருவதும், |
| | ஆமையின் புறச்சார் பலவ னெதுங்குவது |
| 120. | ஏயு மெழிற்கால் வாணீ ! |
| | நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே? | 21 |
| | |
| வாணி. | | அதுவே யம்ம ! என் னுளநின் றறுப்பது. |
| | வலுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர். |