முதல்
அங்கம்.
முதற் காட்சி.
இடம்:-
அரண்மனையில் பத்மாவதிதேவியின் அறை. காலம் - காலை.
பத்மாவதிதேவி
மஞ்சத்தின்மீது வீற்றிருக்க மனோஹரன் தன் தாயார்
பாதத்தருகில்
உட்கார்ந்திருக்கிறான். அருகில் தன் தாதி தாங்க
விஜயாள்
அழுதவண்ணம் நிற்கிறாள். நீலவேணி பத்மாவதிக்குப்
பின்புறமாக
நிற்கிறாள்; சத்தியசீலரும் ராஜப்பிரியனும் ஓர் புறமாக
நின்று
மெல்லப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
|
பத்.
|
கண்ணே,
மனோஹரா, நமது படைகளெல்லாம் பாண்டிய
நாட்டை நோக்கி எப்பொழுது புறப்படுவதாகக் கூறினை?
|
ம.
|
அம்மணி,
இன்றைத்தினம் முப்பது நாழிகைக்கெல்லாம்
புறப்பட வேண்டுமென்று, நமது குலகுரு காலம் நிர்ண
யித்திருக்கிறார்.
|
பத்.
|
ஆனால்
நான் உன்னைத் தாமதிக்கும்படிச் செய்யலாகாது,
சீக்கிரம் புறப்படு, கண்ணே, சுத்த வீரனாகிய உனக்குப்
பெண்பாலாகிய நான் என்ன உரைக்கக்கூடும்?
|
|
ராகம்
- பியாகடை- தாளம் - ஆதி.
பல்லவி.
மனோஹராவுன் மகிமை யறிந்தும்
மாதோ நான் எடுத்துரைப்பது (ம)
அநுபல்லவி.
தன்னே ரில்லா தயாளவீரா
தானவர் பணியும் சூரா (ம)
|