பக்கம் எண் :

காட்சி-2]மனோஹரன்115

வனை. ஐயோ !  போதாக் குறைக்கு இது வொன்றோ?-என்
தலையெல்லாம் என்ன சுழல்கிறதே !  எனக்குப் பயித்
தியம் தான் பிடித்திருக்கிறதென நினைக்கிறேன் !  இல்
லாவிட்டால் எனக்கேன் தூக்கம் வரவில்லை? 
                     [ படுக்கையில் புரள்கிறாள். ] 

புருஷோத்தமராஜன் கையில் வாளுடன் விரைந்து வருகிறார்.

பு. எங்கே நீலவேணி?-நீலவேணி ! 

நீ.  [ எழுந்திருந்து ]  மஹாராஜா ! 

பு. வா இப்படி துஷ்டையே ! 

வனை. ஐயோ !  இதென்ன?

பு. [ போகும்பொழுது ]  அந்த நிருபத்தைக் குறித்து உண்மை
யைக் கூறாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்  !  
                      [புருஷோத்தமனும் நீலவேணியும்
                         போகிறார்கள். ] 

வனை. தீர்ந்தது, நான் நினைத்தவண்ணமே முடிந்தது ! -நிரு
பம் !-உண்மை ! -இவள் எப்படியும் கூறிவிடுவாள் ! -
சந்தேக மில்லை !  நான் வாழாவிட்டால் அவள் மாத்திரம்
மஹாராஜாவுடன்-கூடி வாழ்வானேன்? -எப்படியும்
இறக்கப்போகிறேன்-பழி வாங்கிவிட்டு இறக்கிறேன் ! 
                  [அங்கிருக்கும் ஓர் கட்கத்தைக்
                     கையில் எடுத்துக்கொண்டு அறை
                     யை விட்டு வெளியே ஓடுகிறாள்.] 

               காட்சி முடிகிறது.


             இரண்டாவது காட்சி.

இடம் :- அரண்மனையில் ஒரு திட்டிவாசல், காலம்-இரவு.

      ஒரு புறமாக விகடனும் மற்றொரு புறமாக

          அமிர்தகேசரியும் வருகிறார்கள்.

விக. அந்தமட்டும் ஒழித்துவிட்டோமே சனியை !  இல்லா
விட்டால் நம்மையுங்கூடத் தேடச்சொல்லும். இரண்டு