|
அவனாவது சுகமாய் வாழட்டும், நானிறந்தாலும் பெரிதல்ல !
|
கே.
|
உன் பொருட்டு அவனும் இறக்கப்போகிறான் ! அதைக்
கண்டே நீ சாவாய் ! அவனை நீ கரு தரித்தவுடன் மஹா
ராஜாவை உனது வசமாக்கி, என்னைக்கொன்று, பிறகு
பிறந்த வசந்தனை மஹாராஜாவின் குழைந்தையென எல்
லோரும் நம்பும்படி நீ செய்த சூதுக்கெல்லாம் இதுவே
தக்க தண்டனை !
|
வனை.
|
ஐயோ ! ஐயோ ! வசந்தனும் நானும் இறக்க வேண்டுமோ?
|
கே.
|
ஆம் !
|
வனை.
|
ஐயோ ! நீ இன்னும் என்னை வருத்தாதே, ஒழிந்துபோ !
|
கே.
|
இதோ
போகிறேன். நீ இறந்து சீக்கிரம் என்னுடைய
ஸ்திதிக்கு வருவாய் ! [ மறைகிறது. ]
|
வனை.
|
அப்பா மறைந்துவிட்டது ! -ஒரு வேளை நீலவேணி
இது பேசியதெல்லாம் கேட்டிருந்தாளோ?-நீலவேணி
நீலவேணி !
வேகமாய் நீலவேணி எழுந்திருக்கிறாள்.
|
நீ.
|
ஏன் அம்மா ! [ அருகில் வந்து ] ஏன் அழைத்தீர்?
|
வனை.
|
இங்கு ஏதாவது-யாராவது வந்தார்களா, பார்த்தனையா?
|
நீ.
|
இங்கு யாரம்மா வருவது? ஒருவரும் வரவில்லையே !
|
வனை.
|
சரிதான், நீ உறங்கப் போ.
|
நீ.
|
[ தனக்குள் ]
இப்படி ஏதாவது இருக்கவேண்டுமென்று
அப்பொழுதே நான் சந்தேகப்பட்டேன் ! இல்லாவிட்டால்
மஹாராஜாவுக்குப் பிறக்கும் குழந்தை, பயித்தியக்காரனாய்,
கறுப்பா யிருப்பானா? அம்மட்டும் நான் உறங்காது
கேட்டிருந்தது நலமாயிற்று. கேசரிவர்மருக்கு வழி வைத்த
ஆசாமி தாங்கள் தானா?
[ஒரு
புறம்போய்ப் படுத்துக்
கொள்ளுகிறாள். ]
|