|
மில்லை.
என்ன சங்கடம் ! என்ன சங்கடம் ! ஐயோ !
நித்திரையாவது வராதா ! [ படுத்து ] இல்லை ! இல்லை !
-அப்பா ! மனோஹரா ! -சீ ! என்ன மனப்பிரமை ! மனோ
ஹரன் வந்து என்னை வெட்டினாற்போல் தோற்றியதே !
சித்தப்பிரமை ! ஐயோ ! எனக்கும் பயித்தியம் பிடித்து
விட்டதா என்ன? -சீ ! இதென்ன? மனதைத் தைரியப்
படுத்திக் கொண்டு தூங்கிப்பார்ப்போம்.
[மறுபடியும்
சயனித்துக் கொள்கிறாள். ]
கேசரிவர்மன் அருவம்
தோன்றுகிறது.
யார் அது?-ஐயோ ! வந்தாயா மறுபடியும்?
|
கே.
|
வசந்தசேனை !
வந்தேன் மறுபடியும்?
|
வனை.
|
உன்னை
யார் அழைத்தது? போ ! போ ! ஐயா ! நான்
படுவதெல்லாம் போதாதோ? நீயும் வந்து கிளறவேண்டுமோ?
|
கே.
|
வசந்தசேனை ! -நான்
அப்பொழுதே சொன்னேனே
கேட்டனையா? படு இப்பொழுது ! உன் தீவினை உன்
னையே அழித்தது !
|
வனை.
|
அழித்துத்தான்
விட்டதே ! இன்னும் என்ன இருக்
கிறது? எல்லாம் தீர்ந்ததே !-
|
கே.
|
எல்லாம்
தீர வில்லை ! இதனுடன் உனது துக்கம் நீங்கிய
தென எண்ணாதே ! என்னைக் கொன்றதற்கும், உத்தமி
யாகிய பத்மாவதிதேவிக்கும் மனோஹரனுக்கும் நீ செய்த
தீங்கிற்கும், தக்க தண்டனையாக நீ சீக்கிரம் இறப்பாய் !
|
வனை.
|
இறந்துபோனால்
போகட்டும் ; உன்னை கேட்கவில்லைபோ !
|
கே.
|
வசந்தசேனை !
என் மைந்தனாகிய வசந்தனும் உன்
பொருட்டு-
|
வனை.
|
ஐயோ !
அருவமே ! உறக்கக் கூவாதே, யாராவது
கேட்டுவிடப் போகிறார்கள் ! மஹாராஜாமுதல் எல்
லோரும் வசந்தனை மஹாராஜாவின் மைந்தனென்றே
கருதி யிருக்கிறார்கள். இதுவும் தெரிந்துவிடப்போகிறது
15
|