பக்கம் எண் :

112மனோஹரன்[அங்கம்-4

இனி மஹாராஜா என்னைக் கண்ணெடுத்தும் பார்க்கப்
போகிற தில்லை. ஐயோ !  நான் இதுவரையில் பட்ட
கஷ்டங்களெல்லாம் வீணாயினவே !  வீணாயினவே ! 

நீ. அம்மா, தாங்களேன் துக்கப்படுகிறீர்கள்? எப்படியும்
சின்ன ராணியா யிருக்கும் தங்களுக்கென்ன குறை?

வனை. நீலவேணி, என்னை யினி நீ சின்ன ராணி யென்றழைக்க
வேண்டாம். அவ் வாழ்வெல்லாம் அடியுடன் ஒழிந்
தது. எப்பொழுது மஹாராஜா பத்மாவதியின் முகத்
தை நேரிற் பார்த்தாரோ சபையில், அப்பொழுதே
எனக்குத் தெரியும் !  ஆயினும் மஹாராஜா நான்தான்
இதற்கெல்லாம் காரணமென்று ஒருவாறு சந்தேகங்
கொண்டிருக்கிறாரே யொழிய, நான் செய்த சூது இன்ன
தென்று தெளிவாக அறிந்திலர் !  அந்தமட்டும் எனது
பாக்யந்தான். இதையும் அறிந்தால் தானாகவே என்னைக்
கொன்று விடுவார் ! -நீலவேணி, ஜாக்கிரதை !  அந்த
நிருபங்களின் சமாசாரம் ஒருவருக்கும் தெரிவிக்காதே !

நீ. இல்லை, யம்மா. தாங்கள் எனக்கெவ்வளவோ உபகாரங்க
ளெல்லாம் செய்திருக்கிறீர்களே, அவற்றை யெல்லாம்
நான் மறப்பேனா?

வனை. சரிதான் ;  நீலவேணி, என் தலை என்னவோபளுவாயிருக்
கிறது. நீயும் இந்த அறையில் ஓர் புறமாக உறங்கு சற்றே.

நீ. அப்படியே அம்மா.            [ஒரு புறமாய்ப் படுத்துக்
                               கொள்கிறாள். ]

வனை. கண்ணை மூடிக்கொண்டு பார்ப்போம், அப்பொழுதாவது
தூக்கம் வருகிறதா என்று, ஐயோ ! -கண்ணை மூடும்
பொழுதெல்லாம் மனோஹரனும் பத்மாவதியும் எதிரில்
தோற்றுகிறது போலிருக்கிறதே !  ஐயோ நான் என்ன
செய்வது? தூக்கமும்பிடிக்கவில்லை. சற்று உலாவிப் பார்க்
கவா?  [எழுந்திருந்து உலாவி ] -சீ !  இதிலும் பிரயோஜன