பக்கம் எண் :

காட்சி-4]மனோஹரன்29

இவ்வுடைவாளை இக்கோலத்துடன் கொணர்ந்து, தாம்
பகைவரால் உறங்கும் பொழுது மரண காய மடைந்து
இறந்ததாயும், இறப்பதன்முன் இவ்வுடைவாளை அறி
குறியாகத்தம தன்னைக் கனுப்பி, தாம் சென்ற விடத்
திற்கு அவர்களையும் சீக்கிரம் வரும்படி வேண்டியதாயும்
கூறினான்.

ரா. அரசே !  ஏன், இப்பொழுதாவது என் சொல்லை நம்
புவீரா? அப்பொழுதே இதில் ஏதோ சூதிருக்கிறதெனக்
கூறினேனே ! 

ம.

ராஜப்பிரியா !  நம்பினேன் !  நம்பினேன் !  தோழா, எனது
யிரை இரண்டாம் முறை காப்பாற்றினை. அப்பா, உனக்கு
நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?

ரா. எனக்கு நீர் செய்யவேண்டிய கைம்மாறொன் றிருக்கிறது.
இந்த மஹானுபாவர் அங்கிருந்து வந்த வேகத்தில்
உடம் பெல்லாம் மாசு படிந்திருக்கிறது. அதற்காக, கை
கால்களைக் கட்டி இவருக்கு நான் காவிரி ஸ்நானம் செய்
விக்க வேண்டும், உத்திரவளியும்.

ம. செய் அப்படியே !  நானே கொன்றிருப்பே னிவனை ! 

ப. மனோஹரா, பொறு, அப்படி யொன்றும் செய்ய வேண்
டாம், நாம்தான் இப்பெரிய ஆபத்தினின்றுந் தப்பினோமே,
ஐயோ பாவம் !  இவன் பிழைத்துப்போகட்டும்,
அவனை விட்டுவிடுங்கள்.

ரா. என்ன அம்மணி, இப் பாதகனையா விட்டுவிடும்படிச்
சொல்லுகிறீர்கள்? உங்களை யெல்லாம் அழிக்கப் பார்த்
தானே சற்று முன்பாக !  இதனை மறந்தீரோ இதற்குள்
ளாக !  இவனைத் தண்டியாது உயிருடன் விடுதலே பாபம் ! 

ப. அப்படி யல்ல, இவன் தானாகச் செய்திருக்கமாட்டான்.
யாரோ ஏவியிருக்கவேண்டு மிவனை !- அப்பா, இனி இம்
மாதிரியான தீய தொழிலிற் பிரவேசியாது புத்திசாலி
யாக வாழ்.