பக்கம் எண் :

30மனோஹரன்[அங்கம்-1

ம.

அட பாதகா !  யாருடைய உயிரைப் போக்கப்பார்த்
தனையோ அவர்களுடைய கருணையினால் உன் உயிர் தப்
பினை. இனிமேலாவது இம்மாதிரியான துர்க்கிர்த்தியங்
கள் செய்யாதே, போ.

ப. நீ யேன் இவ் வேலையில் கை யிட்டுக்கொண்டாய்? நாங்
கள் உனக்கென்ன தீங்கு செய்தோம்? நீ யார்?

பௌ.

அம்மணி, என துயிரைக் காப்பாற்றினீர்கள் !  இதை
நான் மறவேன். நான் சந்நியாசி யன்று, பௌத்தாயனன் ! 

எல்லோரும். பௌத்தாயனன் ! 

பௌ. ஆம், வசந்தசேனையினுடைய ஏவலினால் இத்தொழி
லிற்கு உடன்பட்ட பௌத்தாயனன் நான் ! 

ம. ஆ !  அப்படியா சமாசாரம்?
                    [பௌத்தாயனன் தலையைச்
                      சேதிக்க உடைவாளை
                      வீசுகிறான். பத்மாவதி
                      அவனைத்தடுக்கிறாள்.]

ப. மனோஹரா !  இவனுக்கு நான் உயிர்ப் பிச்சை தந்தபின்
இவனை நீ கொல்லலாகாது ;  விட்டுவிடு, அவன் போகட்
டும்- விட்டுவிடு என் சொற்படி.-

ம. ஆம் ! - சீ ! அற்பனே, பிழைத்துப்போ !  உன்னைக் கொல்
வதில் என்ன பயன்? அந்த வசந்தசேனையை யல்லவோ
கொல்லவேண்டும்.

பௌ. அம்மணி, இரண்டாம் முறை எனது உயிரைக் காத்தீர் ! 
-இளவரசே. இதை நான் என்றும் மறவேன் !  உமக்கு
ஓர் ஆபத்தில் எப்படியாவது நான் இறப்பதன்முன் உத
வுகிறேன் பாரும் ! -நான் போகுமுன் ஒன்று கூறுகி
றேன். வசந்தசேனை உயிருட னிருக்குமளவும் உமது
உயிருக்கு ஹானிதான் !  மறவாதீர் !       [போகிறான்.] 

ம. அந்த வசந்தசேனையை இப்பொழுதே கொன்றுவிட்டு
வருகிறேன். இதுவரையில் ஓர் காரணம் வேண்டுமே
என்று பொறுத்திருந்தேன். இனி நான் ஒரு க்ஷண
மேனும் தாமதியேன்.