பக்கம் எண் :

காட்சி-4]மனோஹரன்31

ப.

மனோஹரா, வா இப்படி-உட்கார்-யுத்தத்திற்குப்
போய் ஜெயம்பெற்று வந்தவன் சற்று நேரமாவது என்
னிடம் பேசிப்போவதை விட்டு எங்கேயோ திடீரென்று
போய்விடுகிறாயே ! 

ம. ஆமாம், அம்மணி, மன்னிக்க வேண்டும்.  [உட்கார்ந்து] 
அம்மா, உமது கட்டளைப்படி முத்துவிஜயனைக்
கொன்று, எனது பாட்டனாருடைய சபதத்தை நிறை
வேற்றினேனோ இல்லையோ?

ப.

கண்ணே, உன் வாக்கை நிறைவேற்றினாய் !  சந்தேக
மில்லை. என் மனம் இப்பொழுது குளிர்ந்து சந்தோஷ
மடைந்தது போல, எப்பொழுதும் நீ ஒரு தீங்கு மின்றி
நீடூழி காலம் சந்தோஷமாய் வாழ்வாயாக !  ஆயினும்
கண்ணே, இதைவிட நீ எனக்குச் செய்யவேண்டிய
பெரிய உபகார மொன் றிருக்கிறது, அதைச் செய்வாயா
கண்ணே?

ம.  [உடைவாளை வீசி]  சொல்லும், இந்தக்ஷணம் செய்கிறேன் ! 
வசந்தசேனையைக் கொன்று வரவா?

ப. முதலில் இவ் வுடைவாளை உரையில் போடு.-நீ மஹா
ராஜாவுக்காவது வசந்தசேனைக்காவது என் அனுமதி
யின்றி உன்னுயிருள்ளளவும் ஒரு தீங்கும் செய்வதில்லை
யென்று பிரமாணம் செய்துகொடு.

ம. அம்மா, இதென்ன இப்படி கேட்கிறீர்கள்? வசந்தசேனை
உமக்கு இதுவரையிற் செய்த தீங்கெல்லாம் போதா
தென்று முடிவில் நமதுயிருக்கெல்லாம் ஒரே உலையாக
வைத்தாளே சற்று முன்பாக !  இதை மறந்துவிட்டீரா
என்ன இதற்குள்ளாக? அவளை நான் தண்டியாது விட
மாட்டேன் ;  வேண்டுமென்றால், மஹாராஜாவை நான்
ஒன்றும் செய்யவில்லை யென்று பிரமாணஞ் செய்து
தருகிறேன்-

ப. அப்படி வேண்டா மெனக்கு, நான் சொன்னபடி
கையடித்துக்கொடுப்பாயானால் ஏற்றுக்கொள்ளுகிறேன்.